UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 06:18 PM

சணல் நூல் உற்பத்திக்கான புத்தாக்க சிந்தினையுடன் கூடிய தொழில்நுட்ப யோசனைக்கு, தேசிய சணல் வாரியத்தால் 'டெக்னாலிஜிக்கல் இன்னோவேஷன் கிராண்ட் சேலஜ் 2024' எனும் போட்டியின் கீழ், பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?:
புதுமையான யோசனைகளைக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், தனிநபர் விண்ணப்பிக்கலாம்.
பரிசுத் தொகை:
தேர்வு செய்யப்படும் சிறந்த புத்தாக்க திட்டத்திற்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 1 லட்சமும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஸ்டார்ட்-அப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 31
விபரங்களுக்கு:
இமெயில் - startup.support@investindia.org.in
இணையதளம்: www.startupindia.gov.in