UPDATED : டிச 19, 2025 07:05 AM
ADDED : டிச 19, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில், ஆண்டுதோறும் அரசு, அரசு உதவி பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது.
வரும், 2026 ஜன.,10ம் தேதி இத்தேர்வு நடக்கவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நாளைக்குள் (20ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் மாணவருக்கு வழிகாட்ட வேண்டும் என தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

