வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
UPDATED : ஏப் 10, 2025 12:00 AM
ADDED : ஏப் 10, 2025 06:01 PM
கோவை:
கோவை கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்பறையில் அமர்ந்து தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
8ம் வகுப்பை சேர்ந்த அம்மாணவி, வகுப்பறை முன் படியில் அமர்ந்து தேர்வெழுதுவதை கண்டு அவரது உறவினர் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு, இங்கு அப்படித்தான் நடக்கும்; வேண்டுமென்றால் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என ஆசிரியர்கள் கூறியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
மாதவிடாய் ஏற்பட்ட மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த பள்ளியில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி இது போல் செய்யக்கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

