குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆசிரியை மீது மாணவர்கள் புகார்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆசிரியை மீது மாணவர்கள் புகார்
UPDATED : பிப் 26, 2025 12:00 AM
ADDED : பிப் 26, 2025 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கினார்.
* பீளமேடு செங்காளியப்பன் நகர் மக்கள் கவுன்சிலர் சித்ரா அளித்த மனுவில்,- 26வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பகுதியில், குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்கள் இல்லை. அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
*ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள்அளித்த மனுவில், ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், எங்களுக்கு சரியாக பாடம் எடுப்பதில்லை. அந்த ஆசிரியை ஆய்வகத்துக்கு அழைத்து செல்வதில்லை. எங்களது கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.