UPDATED : மார் 01, 2026 12:13 PM
ADDED : மார் 01, 2026 12:15 PM

கள்ளக்குறிச்சி:
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா தியாகதுருகத்தில் நடந்தது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் தணிகைவேல் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் சி.இ.ஓ., கார்த்திகா மாவட்ட அளவில் நடந்த சிலம்பம், ஜிம்னாஸ்டிக், நீச்சல், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, யோகா, கால்பந்து, கபடி போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்ற 79 மாணவர்களையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.
மேலும் பாராட்டுச் சான்றிதழ் மூலம் உயர் கல்வியில் சேர்க்கை பெற முன்னுரிமை கிடைக்கும். விளையாட்டிலும் கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என பேசினார்.
உடற்கல்வி ஆசிரியர் தனசெல்வம் நன்றி கூறினார்.

