sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜன 29, 2025 12:00 AM

ADDED : ஜன 29, 2025 10:23 AM

Google News

UPDATED : ஜன 29, 2025 12:00 AM ADDED : ஜன 29, 2025 10:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
யு.ஜி.சி., புதிய விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில், கோவை அரசு கலைக்கல்லுாரி முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதிய உணவு இடைவேளையின் போது நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பல்கலை மானியக்குழுவின் வரைவு விதிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சங்க செயலாளர் ஜெயகுமார் கூறுகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் பாதகமானவை. இவற்றால் ஆசிரியர்கள், மாணவர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவர். கல்லுாரிகள், பல்கலைகள் பாதிக்கப்படும். இவ்விதிகளில் ஆட்சேபம் இருந்தால், தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காகவே, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது, என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், கல்லுாரி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, கோவை புலியகுளம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லுாரியிலும், ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கக் கிளைத்தலைவர் ஆனந்தி தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us