sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கு பிரின்டர் வழங்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

/

பள்ளிக்கு பிரின்டர் வழங்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிக்கு பிரின்டர் வழங்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிக்கு பிரின்டர் வழங்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


UPDATED : நவ 28, 2024 12:00 AM

ADDED : நவ 28, 2024 08:31 AM

Google News

UPDATED : நவ 28, 2024 12:00 AM ADDED : நவ 28, 2024 08:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:
மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கு பிரின்டர் மற்றும் பேப்பர் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பருவ, இடைப்பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்க வகுப்புகளுக்கு ஏற்ப, 65 முதல் 120 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க, தேர்வின்போது, மாணவர்களே ஏ4 சைஸ் பேப்பர் வாங்கிச் செல்ல வேண்டும்.

ஆனால், அவர்கள் வாங்கிச் செல்லும் பேப்பர், ஒரே வடிவமைப்பில் இருக்காது என்பதால், பள்ளித் தலைமையாசிரியர்கள் அல்லது ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தி, ஏ4 சைஸ் பேப்பர் கொடுக்கின்றனர்.

இந்த நிலையை சமாளிக்க, அனைத்து அரசு பள்ளிகளுக்கு பிரின்டர் மற்றும் பேப்பர் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:


அனைத்து அரசு பள்ளிகளுக்கும், பிரின்டர்கள் மற்றும் 'ஏ4 சைஸ்' பேப்பர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக, அந்தந்த பள்ளிக்கு இமெயிலில் அனுப்பப்படும் வினாத்தாள் பக்கங்களை நகல் எடுத்து, மாணவர்களுக்கு வழங்கலாம்.

அதனால், வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தேவையில்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 'ஏ4 சைஸ்' பேப்பர் வாங்குவதற்கான நிதி ஒதுக்கினால், பருவ, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு விடை எழுதவும் வசதியாக இருக்கும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us