sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் மைக்-2025 சர்வதேச மாநாடு நிறைவு

/

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் மைக்-2025 சர்வதேச மாநாடு நிறைவு

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் மைக்-2025 சர்வதேச மாநாடு நிறைவு

அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் மைக்-2025 சர்வதேச மாநாடு நிறைவு


UPDATED : டிச 17, 2025 05:50 PM

ADDED : டிச 17, 2025 05:52 PM

Google News

UPDATED : டிச 17, 2025 05:50 PM ADDED : டிச 17, 2025 05:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னை வளாகத்தில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில், ஐந்து நாட்கள் நடைபெற்ற 10-வது மைனிங் இன்டெலிஜென்ஸ் மற்றும் அறிவு ஆய்வுக்கான சர்வதேச மாநாடு (மைக்-2025) நிறைவடைந்தது.

செயற்கை நுண்ணறிவு, அறிவு ஆய்வு, தரவு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த தலைப்புகளில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், நிபுணர்கள் பங்கேற்று கருத்துப் பரிமாற்றம் மேற்கொண்டனர். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஸ்பிரிங்கர் வெளியிடும் செயற்கை நுண்ணறிவில் விரிவுரை குறிப்புகள் தொடரில் வெளியிடப்பட உள்ளன.

மாநாட்டிற்கு முன்பாக நடைபெற்ற பட்டறையில், டாக்டர் என். வினய் குமார் (என்.ஐ.டி டேட்டா, பெங்களூரு) மற்றும் ஆனந்த்குமார் (மைக்ரோசாப்ட், சென்னை) ஆகியோர் ஏஜென்டிக் ஏஐ, ஏஐ பணிப்பாய்வு கட்டமைப்புகள் குறித்து நேரடி பயிற்சி வழங்கினர். மாநாட்டை ஸ்ரீ சிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் (ஆபரேஷன்ஸ்) சதீஷ் காமத் மற்றும் கணிதவியல் ராமானுஜன் மேம்பட்ட படிப்பு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் தங்கராஜ் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் முதல்வர் டாக்டர் ஜெயக்குமார் வரவேற்புரை வழங்கினார். மாநாட்டுத் திட்டத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் (ஐஐஐடி ஸ்ரீசிட்டி) மாநாட்டின் நோக்கங்களை விளக்கினார். வளாக இயக்குநர் ஐ.பி. மணிகண்டன் ஆராய்ச்சி முயற்சிகள் குறித்து உரையாற்றினார். ஏற்பாட்டுத் தலைவர் டாக்டர் சௌந்தர்ராஜன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், மைக்-2025 மாநாட்டிற்கு 256 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, 28 சதவீதத்திற்கும் குறைவான ஏற்றுக்கொள்ளும் விகிதத்துடன் தரமான ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us