sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோள்களின் அணிவகுப்பு அழகிய வானியல் நிகழ்வு

/

கோள்களின் அணிவகுப்பு அழகிய வானியல் நிகழ்வு

கோள்களின் அணிவகுப்பு அழகிய வானியல் நிகழ்வு

கோள்களின் அணிவகுப்பு அழகிய வானியல் நிகழ்வு


UPDATED : ஜன 27, 2025 12:00 AM

ADDED : ஜன 27, 2025 11:29 AM

Google News

UPDATED : ஜன 27, 2025 12:00 AM ADDED : ஜன 27, 2025 11:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரை லேடி டோக் கல்லுாரியில் கோள்களின் அணி வகுப்பு நிகழ்ச்சியை தொலைநோக்கி வழியே பார்வையிட இயற்பியல்துறை, ஆராய்ச்சிமையத்தின் ஜேனஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜனவரி கடைசி வாரம் முதல் பிப்ரவரியில் சில வாரங்களில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் வானியல் அதிசயம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காண முடியும். இந்த நிகழ்வை உலகெங்கும் இருக்கும் அறிவியலாளர்கள், வானவியல் செயல்பாட்டாளர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி கலிலியோ அறிவியல் மையம் மூலம் மதுரையில் லேடி டோக் கல்லுாரியும் தொலைநோக்கி வழியே கோள்களை காண ஏற்பாடு செய்தது. பேராசியர்கள், மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர். அனுமதி கட்டணம் ரூ. 50.

மைய இயக்குனர் சத்ய மாணிக்கம் கூறியதாவது:


சமூக வலைதளம் மூலம் சில தவறான கருத்துகள் பரவி வருகிறது. ஒன்றுக்கொன்று அருகிலே வருகிறது. இதனால் இயற்கை சீற்றங்கள், உடல் உபாதைகள் ஏற்படும் என்று வருகிறது. நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது அவ்வாறுதான் இருக்கும். கோள்கள் அவற்றின் பாதையில்தான் பயணிக்கின்றன. அவை சந்திக்கும் நிகழ்வைதான் பார்க்கிறோம்.

நாம் வியாழன் கோளை உற்று நோக்கும்போது அதன் 4 நிலாக்களை காணலாம். வெள்ளிக் கோளை பார்க்கும் போது பிறை வடிவம் தெரியும். சனிக் கோளின் அழகிய வளையத்தையும் ரசிக்கலாம் என்றார்.

துறைத் தலைவர் நிம்மா எலிசபெத், ஏற்பாடுகளை பேராசிரியர் எஸ்தர் எலிசபெத் கிரேஸ் செய்தனர்.






      Dinamalar
      Follow us