sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தலைமையாசிரியர் இல்லை; ஆசிரியர் பணியிடமும் காலி

/

தலைமையாசிரியர் இல்லை; ஆசிரியர் பணியிடமும் காலி

தலைமையாசிரியர் இல்லை; ஆசிரியர் பணியிடமும் காலி

தலைமையாசிரியர் இல்லை; ஆசிரியர் பணியிடமும் காலி


UPDATED : அக் 29, 2025 08:34 AM

ADDED : அக் 29, 2025 08:35 AM

Google News

UPDATED : அக் 29, 2025 08:34 AM ADDED : அக் 29, 2025 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
அலங்காநல்லுார் மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 4 முதுகலை ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இப்பள்ளியில் 170க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 2018 முதல் தமிழ், வணிகவியல் ஆசிரியர்கள் இல்லை. 2020 ல் ஆங்கிலப் பாட ஆசிரியர் ஓய்வு பெற்ற பின் புதிய ஆசிரியர் நியமிக்கவில்லை. 2024 ல் தலைமையாசிரியரும் ஓய்வு பெற்றார். தற்போது ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னாள் மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள் கூறியதாவது:

இப்பள்ளியில் 2017 - 18 ல் 1200 மாணவர்கள் படித்தனர். அடுத்தடுத்து ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அப்பணியிடம் காலியானதால் மாணவர்கள் வருகை குறைந்துவிட்டது. தற்போதுள்ள மாணவர்களுக்கும் உரிய கல்வி கிடைக்கவில்லை. அதற்கான முயற்சியை ஆலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. பொதுத் தேர்வு தேர்ச்சி பாதிக்கிறது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையை அரசு ஏற்றது போல் மாணவர்கள் நலன் கருதி இப்பள்ளியையும் அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us