சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின்
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM
ADDED : ஜூலை 16, 2025 01:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பள்ளியில் கல்வி தான் கற்றுக் கொடுக்க வேண்டும்; சோறுபோட அது ஹோட்டலா? என்று பேசும் அறிவுக்கொழுந்துகள் அன்று இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா? என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று.
அதனால்தான், எத்தனை நன்மை தமிழகத்திற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.