UPDATED : பிப் 07, 2026 10:17 AM
ADDED : பிப் 07, 2026 10:19 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2, குரூப் 2ஏ-விற்கான முதன்மை தேர்வு நாளை நடக்கிறது.
காலை, 9:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை (ஓ.எம்.ஆர்., முறை) மற்றும் பிற்பகல் மதியம், 02:30 மணி முதல் 05:30 மணி வரை (விளக்க முறை) என இருவேளைகளிலும் நடக்கிறது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த தேர்வை, ஓ.எம்.ஆர்., முறையில், 113 பேரும், விளக்க பதில் முறையில், 116 பேரும் என மொத்தம், 229 பேர் எழுதுகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தர்மபுரி உள்ள அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலையில் நடக்கும் தேர்வில், 323 தேர்வர்களும், மதியம், 342 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர்.

