டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்
UPDATED : ஆக 19, 2026 06:15 PM
ADDED : ஆக 19, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 போட்டி தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, தொடங்கியது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அரசு போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு , பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பை, கலெக்டர் வீரப்பன், தொடங்கி வைத்தார். இதில், 148 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
