ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு
UPDATED : மார் 12, 2026 06:27 PM
ADDED : மார் 12, 2026 06:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீளமேடு:
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில், முதுநிலை பன்னாட்டு வணிகத்துறை, ஏ.ஐ.சி.டி.இ., நிதியுதவியுடன் 2 நாள் தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.
'காலநிலை நடவடிக்கை மற்றும் பசுமை வளர்ச்சி: நிலையான முன்னேற்றுத்துக்கான இந்தியாவின் பாதை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது.
துவக்க விழாவுக்கு, கல்லூரி செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பாலக்காடு ஐ.ஐ.டி., இணை பதிவாளர் தியாகராஜன் கருத்தரங்க ஆய்வுத் தொகுப்பை வெளியிட்டார். கருத்தரங்கில், நாடு முழுதும் இருந்து, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 120 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
முதுநிலை பன்னாட்டு வணிகத்துறைத் தலைவர் பர்வின் பானு, கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர் சிவராமகிருஷ்ணன், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

