sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் துவங்குது தினமலர் - வழிகாட்டி

/

பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் துவங்குது தினமலர் - வழிகாட்டி

பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் துவங்குது தினமலர் - வழிகாட்டி

பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் துவங்குது தினமலர் - வழிகாட்டி


UPDATED : மார் 22, 2025 12:00 AM

ADDED : மார் 22, 2025 10:13 AM

Google News

UPDATED : மார் 22, 2025 12:00 AM ADDED : மார் 22, 2025 10:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :
பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்பது குறித்த, தினமலர் நாளிதழ் வழங்கும், 'வழிகாட்டி' என்ற ஆலோசனை நிகழ்ச்சி, வரும் 28ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.

தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் 28ம் தேதி துவங்க உள்ளது.

இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குவர். மேலும், 80க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகளும் இடம் பெறவுள்ளன.

வரும் 28, 29, 30ம் தேதி ஆகிய மூன்று நாட்களும், காலை 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதுடன், புதிய படிப்புகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்குவர்.

கருத்தரங்குகள்


மூன்று நாட்களிலும் நடக்கும் சிறப்பு கருத்தரங்குகளில், நீட், ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ், ரோபோட்டிக்ஸ் அண்டு ஆட்டோமேஷன், ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., கம்ப்யூட்டிங், கடல்சார் படிப்புகள், மெட்டாவர்ஸ். சி.எஸ்., - ஐ.டி., டேட்டா சயின்ஸ், பிக்டேட்டா. மிஷின் லேர்னிங் உள்ளிட்ட தொழில்சார் படிப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

மேலும், கலை - அறிவியல் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் பற்றியும், மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள் குறித்தும், சட்டம், சி.ஏ., படிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தும் விளக்கப்படும்.

வாய்ப்பு


புதிய படிப்புகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் உள்ளிட்ட விபரங்களை, கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் நேரடியாக கேட்கும் வசதி கிடைக்கும். இதன் வாயிலாக, கல்லுாரிகளை தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.

சிறப்பு விருந்தினர்கள்



கல்வி ஆலோசகர்கள், தொழில் துறை வல்லுநர்கள் பங்கேற்கும் ஆலோசனை நிகழ்ச்சியில், இன்ஜினியரிங் துறையின் எதிர்காலம் குறித்து ஜெயபிரகாஷ் காந்தி; நீட், ஜெ.இ.இ., தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ்கள் குறித்து அஸ்வின்; தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் மற்றும் உதவித்தொகைகள் குறித்து நெடுஞ்செழியன்; எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து பரதன்; 21ம் நுாற்றாண்டு திறன்கள் குறித்து உதயகுமார் ஆகியோர் விளக்குவர்.

உறுதுணை


இந்நிகழ்ச்சிக்கு, பவர்டு பை பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் ஆகியவை செயல்படுகின்றன.

ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, அமெட் பல்கலை, வேல்ஸ் பல்கலை, சிவ் நாடார் பல்கலை, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியவையும் இணைந்து வழங்குகின்றன.

செய்யுங்க


வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், 95007 77833 என்ற வாட்ஸாப் எண்ணுக்கு, RGN என டைப் செய்து அனுப்பலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.






      Dinamalar
      Follow us