காப்பீடு வினாடி வினா போட்டி அரசு பள்ளி மாணவிகள் சாதனை
காப்பீடு வினாடி வினா போட்டி அரசு பள்ளி மாணவிகள் சாதனை
UPDATED : பிப் 05, 2026 01:00 PM
ADDED : பிப் 05, 2026 01:03 PM

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரி அளவிலான வினாடி வினா போட்டியில், பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள், நான்காம் இடம் பிடித்து, 30 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வென்றனர்.
தனியார் காப்பீடு நிறுவனம் சார்பில், காப்பீடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நிதி அறிவை வளர்க்கும் நோக்கில், வினாடி வினா (ஜூனியர் க்விஸ் 2026) போட்டி, சென்னையில் நடத்தப்பட்டது. இப்போட்டியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 1,200 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 8 அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. புதுச்சேரி பிள்ளைச்சாவடி வரதன் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஹர்ஷிதா, லதிஷா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நான்காம் இடத்தை பிடித்து, 30 ஆயிரம் ரூபாய் பரிசு வென்றனர்.
இவர்களுக்கு, ஆசிரியர் சசிகுமார் பயிற்சி அளித்தார்.
வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர் சசிக்குமார் ஆகியோரை, பள்ளி கல்வி இயக்குநர் சிவக்குமார், துணை இயக்குநர் (பெண் கல்வி) ராமச்சந்திரன், தலைமையாசிரியர் ராதிகா ஆகியோர் பாராட்டினர்.

