கலன் ஒருங்கிணைப்பு தொழில் நுட்பம் மேகக் கணிமையியல் பயிலரங்கு
கலன் ஒருங்கிணைப்பு தொழில் நுட்பம் மேகக் கணிமையியல் பயிலரங்கு
UPDATED : மார் 15, 2026 01:19 PM
ADDED : மார் 15, 2026 01:20 PM
புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், கலன் ஒருங்கிணைப்புத் தொழில்நுட்பம் மேகக் கணிமையியல் குறித்த ஒரு நாள் பயிலரங்கு நடந்தது.
நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து பயிலரங்கு நேற்று முன் தினம் நடத்தப்பட்டது. ஐ.டி., துறை கருத்தரங்கக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, துறைத் தலைவர் கீதா தலைமை தாங்கினார். நோக்கியா நிறுவன வல்லுநர்கள் அனந்தகிருஷ்ணன், அருண்குமார், தர்ஷினி மற்றும் தேவிகா ஆகியோர் பங்கேற்று, ஐ.டி., துறையில் தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.
ஏற்பாட்டை பல்கலைக்கழகத்தின் 2012ம் ஆண்டு முன்னாள் மாணவரும், நோக்கியா ஊழியருமான கணேஷ் செய்திருந்தார். பேராசிரியர் கோவிந்தசாமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் மற்றும் ஐ.டி., துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

