sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்; பார்லியில் ஜெய்சங்கர் தகவல்

/

2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்; பார்லியில் ஜெய்சங்கர் தகவல்

2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்; பார்லியில் ஜெய்சங்கர் தகவல்

2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்; பார்லியில் ஜெய்சங்கர் தகவல்


ADDED : டிச 04, 2025 04:49 PM

Google News

ADDED : டிச 04, 2025 04:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் விவாதத்தின் போது ஜெய்சங்கர் பேசியதாவது: மாநில அரசுகளும் தேசிய புலனாய்வு நிறுவனமும் பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறது. இதில் பஞ்சாபில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உள்ளது. 2009ம் ஆண்டு முதல், மொத்தம் 18,822 இந்தியர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். 2023ம் ஆண்டில் 617 இந்தியர்களும், 2024ம் ஆண்டில் 1,368 இந்தியர்களும், ஜனவரி 2025 முதல், தற்போது வரை மொத்தம் 3,258 இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

நடப்பாண்டில் நாடு கடத்தப்பட்டவர்களில் 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடிவரவு துறை கட்டுப்பாட்டில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் வந்தடைந்தனர். பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான ஆட்கடத்தல் வழக்குகள் பதிவாகின்றன. பஞ்சாப் அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை, 2,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.






      Dinamalar
      Follow us