sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2வது டி-20 கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணி 51 ரன்களில் வெற்றி

/

2வது டி-20 கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணி 51 ரன்களில் வெற்றி

2வது டி-20 கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணி 51 ரன்களில் வெற்றி

2வது டி-20 கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணி 51 ரன்களில் வெற்றி


UPDATED : டிச 11, 2025 10:57 PM

ADDED : டிச 11, 2025 09:14 PM

Google News

UPDATED : டிச 11, 2025 10:57 PM ADDED : டிச 11, 2025 09:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முல்லன்புர்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 51 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது.இரண்டாவது போட்டி இன்று பஞ்சாப்பின் முல்லன்புரில் (புதிய சண்டிகர்) நடந்தது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது

அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டிகாக்கும், ஹென்ட்ரிக்ஸ் இறங்கினர். இதில் ஹெ ன்ட்ரிக்ஸ் 8 ரன்னில் வருண் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆடிய குயின்டன் டிகாக், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளாக விளாசி 90 ரன் சேர்த்து ரன் அவுட் ஆனார்.பிரேவிஸ் 14,எய்டன் மார்க்ரம் 29 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

பெரேரா ஆட்டமிழக்காமல் 30 ரன்களும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 20 ரன்களும் எடுத்தனர். வருண் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

20 ஓவரில் தென் ஆப்ரிக்க அணி, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் குவித்தது.இதனையடுத்து தென் ஆப்ரிக்க அணி, இந்திய அணிக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் நிகிடி பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்த வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். சிறிது நேரம் தாக்குபிடித்த அக்ஷர் படேல் 21 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

மற்றொரு ஆட்டக்காரர் அபிஷே க் சர்மா 17 ரன்களுக்கு ஜேன்சன் பந்தில் அவுட் ஆனார்.ஹர்திக் பாண்டியா 20 ரன்களுக்கு சிபம்லா பந்தில் அவுட் ஆனார். திலக் வர்மா அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்து நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். ஜிதேஸ் சர்மா 27 ரன்கள் சேர்த்து சிபம்லா பந்தில் ஆட்டமிழந்தார். துபே 1 ரன்னிலும், அர்ஷ்தீப் சிங் 4 ரன்களும் வருண் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி, 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ர ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணி, 51 ரன்களில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்க பவுலர்கள் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளையும், நிகிடி, ஜேன்சன்,சிபம்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் தென் ஆப்ரிக்க அணியும், இந்திய அணியும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.






      Dinamalar
      Follow us