sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் எங்கள் போட்டியாளர்: சொல்கிறார் உதயநிதி

/

பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் எங்கள் போட்டியாளர்: சொல்கிறார் உதயநிதி

பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் எங்கள் போட்டியாளர்: சொல்கிறார் உதயநிதி

பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் எங்கள் போட்டியாளர்: சொல்கிறார் உதயநிதி

35


ADDED : ஜன 01, 2026 12:13 PM

Google News

ADDED : ஜன 01, 2026 12:13 PM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''பலவீனமாக இருந்தாலும் அதிமுக தான் எங்கள் போட்டியாளர்,'' என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு உதயநிதி அளித்த பேட்டி: நீண்ட காலமாக எங்கள் பிரதான போட்டியாளராக அதிமுக இருந்தாலும், இப்போதைய நிலையில் பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. பலவீனமான நிலையில் அதிமுக இருந்தாலும், அதைத்தான் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் தான் எங்களது போட்டியாளர்.

தயார்

நாங்கள் பாஜ கட்சியையும் அதன் அனைத்து பி டீம்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் மதசார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பாஜ அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்பதை அறிந்தே இருக்கிறோம். தமிழக மக்கள் பாஜவின் சதியை அறிந்து அதை தோற்கடிப்பர். எங்கள் கூட்டணியில் ஒவ்வொரு கட்சியையும் திமுக மதித்து அவர்களது கருத்துகளை உள்வாங்கி கொள்கிறது. எங்கள் கூட்டணி பரஸ்பரம், மரியாதை தரக்கூடியது.

முக்கியத்துவம்

தேஜ கூட்டணியில் முடிவுகள் அனைத்து டில்லியில் எடுக்கப்பட்டு தமிழக கட்சிகளின் மீது திணிக்கப்படுகிறது. கட்சி தலைவர் ஸ்டாலின் திமுக இளைஞர் அணியை துவக்கி நீண்டகாலம் வழிநடத்தியவர். அந்தவகையில் இளைஞர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் புரிந்தே இருக்கிறார். கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க நான் குரல் கொடுப்பேன். இவ்வாறு உதயநிதி கூறினார்.






      Dinamalar
      Follow us