sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்

/

பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்

பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்

பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்


ADDED : நவ 15, 2025 02:35 PM

Google News

ADDED : நவ 15, 2025 02:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: ''பீஹார் தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணம் என அகிலேஷ் யாதவ் கூறுவது துரதிர்ஷ்டவசமானது'' என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படும்தோல்வி அடைந்துள்ளது. அதேநேரத்தில், 5 தொகுதிகளில் ஒவைசி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, நிருபர்களிடம் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது: நான் அவ்வளவு பெரிய அரசியல்வாதி இல்ல, ஆனால் இந்த முடிவுக்கான சாத்தியக்கூறு என்னன்னு எனக்குப் புரியுது.

அவங்க 200ஐத் தொடுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை.இப்போது அவங்க (மஹாகட்பந்தன் கூட்டணி) யோசிக்க வேண்டும். ஒவைசி பொறுப்புன்னு அவங்க பழைய பதிவுகளை மீண்டும் போட்டா போடட்டும்.

அந்தப் பாட்டைப் பாடட்டும். அகிலேஷ் யாதவ் பீஹார் தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணம் என சொல்ல ஆரம்பித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது தவறு.

நாங்களும் தேஜ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பவில்லை. நாங்க எல்லா முயற்சிகளையும் எடுத்தோம். நீங்கள் தயாராக இல்ல. இது பீஹார் மக்களின் தீர்ப்பு, அதை மரியாதையா ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள். பீஹாரில் அவர் உண்மையிலேயே வளர்ச்சி அடைய விரும்பினால், சீமாஞ்சலில் நீதி நிலைநாட்ட ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைச் செய்வோம். இவ்வாறு அசாதுதீன் ஒவைசி கூறினார்.






      Dinamalar
      Follow us