sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்க அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மசோதா; டிரம்ப் நிம்மதி

/

அமெரிக்க அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மசோதா; டிரம்ப் நிம்மதி

அமெரிக்க அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மசோதா; டிரம்ப் நிம்மதி

அமெரிக்க அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மசோதா; டிரம்ப் நிம்மதி


UPDATED : நவ 10, 2025 07:56 PM

ADDED : நவ 10, 2025 07:54 PM

Google News

UPDATED : நவ 10, 2025 07:56 PM ADDED : நவ 10, 2025 07:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது.

அமெரிக்காவில் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய நிதி ஆண்டு துவங்கும். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம், உணவு உதவி போன்ற செலவினங்களுக்கு பார்லிமென்டில் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஆனால், கடந்த அக்டோபர் 1ல் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவு, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைக்காததால், நிதி மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அரசின் பல்வேறு துறைகள் முடங்கியது.

முந்தைய அதிபர் ஒபாமா கொண்டு வந்த மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கான அரசு மானியங்கள் டிசம்பருக்குள் முடிவடைகிறது. இதை நீட்டிக்க ஜனநாயக கட்சியினர் கோரிக்கை வைக்கின்றனர். அதை டிரம்ப் ஏற்க மறுக்கிறார். இதனால் மசோதாவை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்தது. அரசு நிர்மாகம் முடங்கி 40 நாட்கள் ஆகியுள்ளது. நடந்து முடிந்த மேயர் மற்றும் மாகாண தேர்தலில் குடியரசு கட்சி தோற்றதற்கு அரசு முடக்கமே காரணம் என டிரம்ப் கருதுகிறார். எனவே முடக்கத்தை விரைவில் நீக்க விரும்பினார்.

தற்போது, வரலாற்றிலேயே மிக நீண்ட கால அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, குடியரசுக் கட்சியினர் கொண்டு வந்த செலவு மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது. இந்தச் சூழலில் தான் ஒரு சமரச முடிவு எட்டப்பட்டுள்ளது. 8 ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் செலவின மசோதாவுக்கு ஆதரவளித்தனர்.

அதாவது இப்போது செலவின மசோதா மட்டும் நிறைவேறுகிறது. இந்த புதிய மசோதாவின்படி பெடரல் அரசுக்கு ஜனவரி 30ம் தேதி வரை தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான 60 ஓட்டுக்கள் கிடைத்துவிட்டது. இதன் மூலம் செலவின மசோதா செனட் சபையில் மசோதா செனட்டில் நிறைவேறியது.

அடுத்தகட்டமாகச் செலவின மசோதாவை அவர்கள் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்ப வேண்டும். அங்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இருப்பதால் எளிதாக மசோதா நிறைவேறிவிடும். அதன் பிறகு அதிபர் டிரம்ப் அதற்கு ஒப்புதல் தருவார். இதனால் அரசு நிர்வாகம் முடக்கம் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நிம்மதியை அளித்துள்ளது.






      Dinamalar
      Follow us