தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு; நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
ADDED : நவ 05, 2025 02:55 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ., 05) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (நவ., 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* சிவகங்கை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* நாகை
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* திருச்சி
* அரியலூர்
* பெரம்பலூர்
* நாமக்கல்
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
நாளை (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருச்சி
* பெரம்பலூர்
* அரியலூர்
* கள்ளக்குறிச்சி
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
நாளை மறுநாள் (நவ.,07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
நவ., 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

