sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

/

கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

4


UPDATED : மார் 07, 2026 03:56 PM

ADDED : மார் 07, 2026 02:24 PM

Google News

4

UPDATED : மார் 07, 2026 03:56 PM ADDED : மார் 07, 2026 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நான்கு மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு இன்று (மார்ச் 07) தீர்ப்பு அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையை அறிவித்தார்.

கோவை, பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ., 2ம் தேதி இரவில், நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ்,30, இவரது சகோதரர் கார்த்திக்,21, மதுரை, கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் மீது, டிச., 3 ல், முதல் கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை கூடுதல் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு, டிச., 19 ல் கோவை மகளிர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. ஜன., 9ல், 220 பக்கம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜன., 29 ல் குற்றச்சாட்டுபதிவு செய்யப்பட்டு, பிப்., 2ல் சாட்சி விசாரணை துவங்கியது.

பிப்., 23 ல் சாட்சி விசாரணை நிறைவு பெற்றது. பிப்., 24 ல் அரசு தரப்பு வக்கீல் ஜிஷா, இறுதி வாதத்தை முன்வைத்தார். எதிர் தரப்பில் இலவச சட்ட உதவி மைய வக்கீல்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதம் முடிந்ததையடுத்து, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார். அதன்படி மதியம் 3 மணி அளவில் தண்டனை விபரங்களை அவர் வெளியிட்டார். குற்றவாளிகள் 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us