sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் கமிஷன் தனது கடமையைத்தான் செய்துள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

/

தேர்தல் கமிஷன் தனது கடமையைத்தான் செய்துள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

தேர்தல் கமிஷன் தனது கடமையைத்தான் செய்துள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

தேர்தல் கமிஷன் தனது கடமையைத்தான் செய்துள்ளது: மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு

1


ADDED : டிச 20, 2025 03:05 PM

Google News

1

ADDED : டிச 20, 2025 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேர்தல் கமிஷன் தனது கடமையைத்தான் செய்துள்ளது என எஸ்ஐஆர் பணி குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாராட்டியுள்ளார்.

தமிழக பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சென்னை வந்தடைந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ஏராளமான பாஜவினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எஸ்ஐஆர் வந்து பல வருடமாக நடக்கவில்லை.

அதாவது பல இறந்து போன வாக்காளர்கள் இருந்து இருக்கிறார்கள் அல்லது இரட்டை இடத்தில் வாக்காளர்களாக இருந்து இருக்கிறார்கள். அதை எல்லாம் சரி செய்யும் பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது. அதை தான் செய்து இருக்கிறார்கள். உண்மையாக சொல்ல போனால், இந்த தேர்தலில் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் விருப்பம்.

அரசியலுக்காக தான் அதனை திமுகவினர் எதிர்த்தார்கள். எஸ்ஐஆர் பணி தேவை என்று அனைவருக்கும் தெரியும். பார்லியில் விவாதங்களில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டதை நாம் பார்த்தோம். எஸ்ஐஆர் என்பது இரட்டை வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்களை நீக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் கூட, அதை தான் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.






      Dinamalar
      Follow us