சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : அக் 17, 2025 01:51 PM

மதுரை: சாலை களில் ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால உத்தரவிட்டது.
தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளது. அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களும் நீக்கப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* முதற்கட்ட கள ஆய்வு பணியை மேற்கொள்ளலாம். ஜாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக கருத்து கேட்பு, ஆய்வுகள் நடத்த வேண்டும்.
* அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்த வழக்கு குறித்து, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.