sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது அரசு

/

 டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது அரசு

 டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது அரசு

 டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது அரசு


ADDED : நவ 23, 2025 02:44 AM

Google News

ADDED : நவ 23, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியதால், சமீபத்தில் திருத்தப்பட்ட காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

டில்லியில், குளிர்காலத்தில் காற்று மாசு பிரச்னை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காற்றின் தரம் குறையும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன.

இதன்படி, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று தரக்குறியீடு, 450 என்ற மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

இதையடுத்து, ஜி.ஆர்.ஏ.பி., எனப்படும், காற்று மாசு கட்டுப்பாடுகளுக்கான தரப்படுத்தப்பட்ட செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் காற்றின் தரம் குறித்து சமீப ஆண்டுகளில் திரட்டப்பட்ட நிபுணர்களின் பரிந்துரைகளின்படி நான்காம் நிலையில் உள்ள தரக்கட்டுப்பாடுகளை, மூன்றாம் நிலைக்கு மாற்ற காற்று தர ஒழுங்குமுறை கமிஷன் பரிந்துரைத்தது.

இதன்படி, காற்று மாசு கட்டுப்பாட்டின் தரநிலை, 401 - 450 என்ற மிகவும் மோசமான நிலையை எட்டியதால், நேற்று முன்தினம் முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இதன்படி, டில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்; மற்றவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.85 கோடி அபராதம் டில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இன்றி பயணித்த வாகன ஓட்டிகளிடம் இருந்து கடந்த அக்., 14 - நவ., 18ம் தேதி வரையில் மட்டும், 84.98 கோடி ரூபாய் அபராதமாக போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர். காற்று மாசு கட்டுப்பாடுகளின் முதல் மற்றும் இரண்டாம் நிலைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், விதிமீறலில் ஈடுபட்ட 84,981 வாகன ஓட்டிகளிடம் இருந்து, தலா, 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக டில்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us