sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி ஒப்படைத்த இண்டிகோ நிறுவனம்

/

பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி ஒப்படைத்த இண்டிகோ நிறுவனம்

பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி ஒப்படைத்த இண்டிகோ நிறுவனம்

பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி ஒப்படைத்த இண்டிகோ நிறுவனம்


ADDED : டிச 08, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளின் 610 கோடி ரூபாய் டிக்கெட் தொகையை திருப்பி செலுத்தி விட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான ஊழியர்களின் பற்றாக்குறை, தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி விமான போக்குவரத்து இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதுகாப்பு விதிகளில் இருந்து அடுத்தாண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை அளிக்கப்பட்ட தளர்வு காரணமாக, மெல்ல மெல்ல விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. நேற்று மட்டும் 1,650 விமானங்கள் இயக்கப்பட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தம் உள்ள 138 இடங்களில் ஒரு இடத்தை தவிர்த்து பிற பகுதிகளுக்கு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 75 சதவீத விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று இரவுக்குள் பயணம் ரத்தானவர்களுக்கான டிக்கெட் தொகையை திருப்பி செலுத்த கெடு விதித்திருந்த நிலையில், 610 கோடி ரூபாயை ஒப்படைத்து விட்டதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us