sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம்; முப்படை தளபதி சவுகான்

/

அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம்; முப்படை தளபதி சவுகான்

அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம்; முப்படை தளபதி சவுகான்

அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம்; முப்படை தளபதி சவுகான்


ADDED : செப் 30, 2025 08:14 PM

Google News

ADDED : செப் 30, 2025 08:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பது முக்கியம் என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் ராணுவ நர்சிங் சேவையின் 100வது நிறுவன தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அனில் சவுகான் பேசியதாவது: கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் உயிரியல் அச்சுறுத்தல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்தையும் திறம்பட எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் உலக நாடுகள் கடும் இன்னல்களை சந்தித்து தற்போது மீண்டு வந்துள்ளது.

பின்வாங்காது

அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவைத் தளரவிடாமல் இருக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அணு ஆயுத அச்சுறுத்தலால் இந்தியா பின்வாங்காது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

ராணுவ நர்சிங் சேவை தேசத்திற்கு 100 ஆண்டுகால தன்னலமற்ற சேவையை நிறைவு செய்துள்ளது. மோதல்களின் முன்னணியில் இருந்தாலும், தற்காலிக மருத்துவமனைகளில் இருந்தாலும், கடல்களில் கப்பல்களில் இருந்தாலும் அல்லது மனிதாபிமானப் பணிகளில் இருந்தாலும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்துள்ளனர்.

இதயத்துடிப்பு

செவிலியர்கள் சுகாதாரத் துறையின் இதயத்துடிப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் சிகிச்சையுடன் நம்பிக்கை மற்றும் ஆறுதலை வழங்குகிறார்கள். இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.






      Dinamalar
      Follow us