sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்

/

100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்

100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்

100 நாள் இல்லை… இனி 125 நாள்: பார்லியில் புதிய மசோதா தாக்கல்

13


UPDATED : டிச 16, 2025 01:31 PM

ADDED : டிச 16, 2025 01:08 PM

Google News

13

UPDATED : டிச 16, 2025 01:31 PM ADDED : டிச 16, 2025 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

பார்லியில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழித்து, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கடந்த 2005ல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் இன்று (டிச.,16) லோக்சபா கூடியதும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த புதிய மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகம் செய்தார்.

கிராமப்புற வளர்ச்சி

அப்போது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், ''மஹாத்மா காந்தியை நம்புவது மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளையும் மத்திய அரசு பின்பற்றுகிறது. முந்தைய அரசுகளை விட மோடி அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு அதிகம் செய்துள்ளது'', என தெரிவித்தார்.

கடும் எதிர்ப்பு

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ''இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 40% ஆக குறைத்துள்ளது'' என காங்கிரஸ் எம்பி பிரியங்கா குற்றம் சாட்டினார். தொடர்ந்து மசோதா மீது அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.

புதிய மசோதா என்ன?

'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025' என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த புதிய மசோதா படி , 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிப்பு

முன்னதாக, இந்த 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து லோக்சபாவை ஒத்திவைத்து விட்டு, விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் எம்பி டி.ஆர்.பாலு மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார்.



எம்.பி.,க்கள் அமளியை தொடர்ந்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

போராட்டம்

100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட் வளாகத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.








      Dinamalar
      Follow us