sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமேதியில் ராகுலை போல ரகோபூரில் தேஜஸ்வி தோற்பார்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

/

அமேதியில் ராகுலை போல ரகோபூரில் தேஜஸ்வி தோற்பார்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

அமேதியில் ராகுலை போல ரகோபூரில் தேஜஸ்வி தோற்பார்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

அமேதியில் ராகுலை போல ரகோபூரில் தேஜஸ்வி தோற்பார்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

1


ADDED : அக் 11, 2025 04:51 PM

Google News

1

ADDED : அக் 11, 2025 04:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: அமேதி லோக்சபா தொகுதியில் ஆறு ஆண்டுக்கு முன் எப்படி ராகுல் தோற்றாரோ அதேபோல ஒரு தோல்வியை தேஜஸ்வி சந்திப்பார் என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகள் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளன. புதியதாக ஜன் சுராஜ் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் தேர்தல் களத்தில் இருக்கிறார்.

மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் ரகோபூர் தொகுதிக்குச் செல்லும் முன்னர் நிருபர்களிடம் பேசினார். அப்போது பிரசாந்த் கிஷோர் கூறியதாவது;

ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து (லாலு பிரசாத் குடும்பத்தை குறிப்பிடுகிறார்) மக்களை காக்க, அவர்களிடம் கருத்துகளை கேட்க நான் ரகோபூர் செல்கிறேன். அங்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறோம்.

கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நாளை (அக்.12) நடக்கிறது. அங்கு அனைவரின் கருத்தை கேட்ட பின்னர் ரகோபூரில் யார் போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படும்.

நான் அங்கு போட்டியிட போவதாக பேச்சுகள் உள்ளதால், தேஜஸ்வி வேறு இடத்தை தேடுகிறார். அவர் எங்கு போட்டியிட்டாலும் 6 ஆண்டுக்கு முன் அமேதியில் ராகுலுக்கு எப்படி தோல்வி கிடைத்ததோ அதே போன்ற தோல்வி தான் அவருக்கும் கிடைக்கும். தேஜஸ்வி பயந்துவிட்டார். அவர் இரண்டு இடங்களில் போட்டியிடட்டும்.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.






      Dinamalar
      Follow us