sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடி விபத்து: 40 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

/

சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடி விபத்து: 40 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடி விபத்து: 40 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடி விபத்து: 40 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

18


UPDATED : ஜன 01, 2026 05:21 PM

ADDED : ஜன 01, 2026 12:56 PM

Google News

18

UPDATED : ஜன 01, 2026 05:21 PM ADDED : ஜன 01, 2026 12:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூரிச்: சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் பிரபலமான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடி மகிழ, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அந்நாட்டு நேரப்படி, அதிகாலை 1.30 மணிக்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் வெளிநாட்டினரும் அடக்கம்.

புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடித்த போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதல் இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.

2012ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த சியர் ரயில் விபத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவத்தை போலவே இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசர உதவிக்கு +41 848 112 117 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us