sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்

/

அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்

அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்

அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்

7


UPDATED : மார் 02, 2026 05:27 PM

ADDED : மார் 02, 2026 02:01 PM

Google News

7

UPDATED : மார் 02, 2026 05:27 PM ADDED : மார் 02, 2026 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத் நகரம்: குவைத் வான்வெளியில் பறந்த 3 அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த போர் விமானங்களை குவைத் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் ஆட்சியாளர் கமேனியை அமெரிக்கா கொலை செய்த பிறகு, போர் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, துபாய், கத்தார் போன்ற நாடுகளில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பல போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகின.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'இன்று காலை பல அமெரிக்க ராணுவ விமானங்கள், விழுந்து நொறுங்கின. அதில் பயணித்த வீரர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.காயமடைந்த அமெரிக்க விமானப் படையினர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் நிலை சீராக உள்ளது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று போர் விமானங்களை குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தை குவைத்து ஒப்புக் கொண்டுள்ளது. மீட்புப் பணிக்கு உதவிய ஈரானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us