sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எஸ்ஐஆர் பணி: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு

/

எஸ்ஐஆர் பணி: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு

எஸ்ஐஆர் பணி: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு

எஸ்ஐஆர் பணி: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு

4


UPDATED : டிச 11, 2025 05:10 PM

ADDED : டிச 11, 2025 05:01 PM

Google News

4

UPDATED : டிச 11, 2025 05:10 PM ADDED : டிச 11, 2025 05:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான அவகாசத்தை, தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை டிச.,14 வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதுடன், அதை பூர்த்தி செய்து திரும்ப பெற, வரும் 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள, 6.41கோடி வாக்காளர்களில், 6.30 கோடி வாக்காளர்களுக்கு மேல், கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், திரும்ப பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை இன்று ( டிச.,11) வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழகம், குஜராத், மபி, சத்தீஸ்கர், உபி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் எஸ்ஐஆர் பணிகளை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க வரும் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச.,19ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 சதவீதம்

இதனிடையே தமிழகத்தில் விநியோகம் செய்யப்ப்டட எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ஆறு கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 221 விண்ணப்பப்படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us