தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1'

இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1'

இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1'

2


UPDATED : ஜூலை 18, 2026 10:00 AM

ADDED : ஜூலை 18, 2026 08:35 AM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : ஜூலை 18, 2026 10:00 AM ADDED : ஜூலை 18, 2026 08:35 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இத்தகைய முன்னேற்றம் இருக்கும் நிலையிலும், அரசு சார்பில் பஸ்களை இயக்கி, அதில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள் தலையில் பாரம் ஏற்றுகிறது அரசு.

ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்படுகிறது. 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இந்நிறுவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்- 1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.

இதை சோதனை முயற்சியாக ஏவ, அதற்கான பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தன. இந்நிலையில் இன்று (ஜூலை 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் பயணத்தில் 450 கி.மீ., உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல்; இன்று காலை 11:30 மணிக்கு, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1-ஐ ஏவுகிறது. இந்தத் திட்டம் நமது இளைஞர்களின் திறமையை எடுத்துக்காட்டுகிறது.
நமது விண்வெளித் துறை சீர்திருத்தங்கள், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் இது காட்டுகிறது. இந்த வெற்றிகரமான ஏவுதலுக்காக, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். விக்ரம்-1 வானில் உயர்ந்து, சரித்திரம் படைத்து, வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கட்டும்.
அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக எனது இளம் நண்பர்களையும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைப் பின்தொடருமாறும், #IndiaWithVikram1 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஸ்கைரூட் குழுவின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.



அரசு பஸ் இயக்கத்தில் நஷ்டம்

இப்படி தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் விண்ணில் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னும் அரசு தரப்பு பஸ் போக்குவரத்தை தன்வசம் வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள் தலையில் வரி பாரத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறது. தனியார் முதலீடு இல்லாத காலத்தில் அரசு பஸ் போக்குவரத்தை நடத்த ஆரம்பித்தனர்.
இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது. நாட்டு வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு முதல் மின்சாரம் தயாரிப்பது, ராக்கெட் ஏவுவது என அனைத்திலும் தனியார் முன்னிற்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில் அரசு இன்னும் பஸ் போக்குவரத்தை நடத்தி, அதில் நஷ்டம் காண்பது தேவைதானா?
அரசு செய்யும் எந்த ஒரு தொழிலும் லஞ்சம், ஊழல் முறைகேடு, திறனற்ற நிர்வாகத்தால் நஷ்டம் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. மொபைல் போன் தொழில் துறையை கண்காணிக்கும் TRAI அமைப்பு போல, அரசு கண்காணிப்பு வேலையை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர, பஸ் போக்குவரத்து போன்ற தொழில்களை செய்யக்கூடாது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us