புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா; பிரதமர் மோடி வருகை: தினமலர் சேனலில் நேரலை
புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா; பிரதமர் மோடி வருகை: தினமலர் சேனலில் நேரலை
UPDATED : நவ 19, 2025 10:25 AM
ADDED : நவ 19, 2025 10:05 AM
முழு விபரம்

புட்டபர்த்தி:
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின்
நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
ஸ்ரீ
சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ., 23ல்
பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கத் துவங்கினார்.
புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில்
பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக
செயல்படுகின்றன.
போதனைகள்
இந்தியா மட்டுமின்றி உலகின்
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால்
ஈர்க்கப்பட்டு பக்தர்களாகி வருகின்றனர். புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய்
பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி
தொடங்கியது. வரும் நவ., 24 வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை
சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மகா சமாதியில் அஞ்சலி
இவ்விழாவில்
பங்கேற்க, பிரதமர் மோடி இன்று (நவ.,19) காலை புட்டபர்த்தி வந்தார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சமாதியில்
அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின்
நூற்றாண்டு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.
தபால் தலை
பகவான்
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை
கவுரவிக்கும் விதமாக நினைவு நாணயம் மற்றும் ஒரு தபால் தலையை பிரதமர் மோடி
வெளியிடுகிறார்.

