sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பீச்'சில் குப்பை அள்ளிய முதல்வரின் மனைவி

/

'பீச்'சில் குப்பை அள்ளிய முதல்வரின் மனைவி

'பீச்'சில் குப்பை அள்ளிய முதல்வரின் மனைவி

'பீச்'சில் குப்பை அள்ளிய முதல்வரின் மனைவி


ADDED : செப் 08, 2025 12:31 AM

Google News

ADDED : செப் 08, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 10 நாட்கள் நீடித்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பின், விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கப்பட்ட மும்பையின் ஜூஹூ கடற்கரை பகுதியில் துாய்மைப் பணிக்கு, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, அம்ருதா பட்னவிசின் 'திவ்யராஜ்' என்ற அரசு சாரா அறக்கட்டளை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி, ஜூஹூ கடற்கரையில் நேற்று துாய்மைப் பணியில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷண் கக்ராணி உள்ளிட்டோருடன் அம்ருதா பங்கேற்றார்.

''ஒரே ஒரு பூமி தான் உள்ளது. அதன் கடற்கரைகளையும், காடுகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை. விநாயகர் சிலைகள் கரைப்புக்கு பின், மும்பை ஜூஹூ கடற்கரையில் துாய்மைப் பணிக்கு ஏற்பாடு செய்தோம். இதில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன,'' என அம்ருதா கூறினார்.






      Dinamalar
      Follow us