sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி

/

தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி

தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி

தொண்டர்களின் உற்சாகம் புது ஆற்றலை அளிக்கிறது: பிரதமர் மோடி


ADDED : அக் 30, 2025 07:49 PM

Google News

ADDED : அக் 30, 2025 07:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பாஜ தொண்டர்களின் ஊக்கமும், வைராக்கியமும் புது ஆற்றலை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, இம்மாநிலத்தில் பாஜ, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர ஓட்டு சேகரிப்பில் உள்ளனர். பீஹார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில், பாஜ தொண்டர்கள் சிலரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மோடி கூறியுள்ளதாவது: பிரசாரத்திற்கு இடையே தொண்டர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அர்ப்பணிப்புள்ள தொண்டர்களை சந்தித்த இன்றைய அனுபவம் மிகவும் சிறப்பானது. அவர்களின் உற்சாகமும், வைராக்கியமும் ஒரு புதிய சக்தியை ஊட்டியுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us