sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சமைக்கிற வேலை இல்லை; ஆனால் சம்பளம் உண்டு பாத்திரம் தேய்த்து பொழுதை கழிக்கும் ஊழியர்கள்

/

 சமைக்கிற வேலை இல்லை; ஆனால் சம்பளம் உண்டு பாத்திரம் தேய்த்து பொழுதை கழிக்கும் ஊழியர்கள்

 சமைக்கிற வேலை இல்லை; ஆனால் சம்பளம் உண்டு பாத்திரம் தேய்த்து பொழுதை கழிக்கும் ஊழியர்கள்

 சமைக்கிற வேலை இல்லை; ஆனால் சம்பளம் உண்டு பாத்திரம் தேய்த்து பொழுதை கழிக்கும் ஊழியர்கள்


UPDATED : நவ 18, 2025 06:29 AM

ADDED : நவ 18, 2025 06:27 AM

Google News

UPDATED : நவ 18, 2025 06:29 AM ADDED : நவ 18, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையில், பொது சமையலறை திட்டம் செயல்பாட்டில் உள்ள விடுதிகளில், மாதம், 35,000 ரூபாய் சம்பளம் வாங்கும் சமையலர்களுக்கு வேலை இல்லை. அதனால், பாத்திரம் தேய்க்கின்றனர்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும், 1,331 சமூக நீதி விடுதிகளில், 65,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.

இவர்களில், பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400 ரூபாய், கல்லுாரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உணவு படியாக வழங்கப்படுகிறது. அரிசி உள்ளிட்ட பொருட்கள், ரேஷன் திட்டத்தின் கீழ் விடுதிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இம்முறையில், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால், நகர்ப்புறங்களில் உள்ள விடுதிகளில் மட்டும், பொது சமையலறை திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

சமையலறை திட்டம் அதாவது, தனியார் நிறுவனம் வாயிலாக, ஒரே சமையலறையில் உணவு தயாரித்து, அனைத்து விடுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுவதாகும்.

இதன்படி, சென்னையில் உள்ள, 23 விடுதி மாணவர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, பொது சமையலறை திட்டம், மதுரை மற்றும் கோவையில் உள்ள, 27 சமூக நீதி விடுதிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சியிலும் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பொது சமையலறை திட்டம் செயல்பாட்டில் உள்ள விடுதி மாணவர்களுக்கு தேவையான உணவுகளை, மூன்று வேளையும் தனியார் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதனால், விடுதிகளில் உள்ள சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வேலை இல்லை.

ஒரு விடுதிக்கு ஒரு சமையலர், ஒரு உதவியாளர் என, 10-0க்கும் மேற்பட்ட ஊழியர்கள், வேலையின்றி விடுதிகளில் சும்மா இருக்கின்றனர். உணவு பரிமாறுவது, பாத்திரங்கள் தேய்ப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்கின்றனர்.

இவர்களுக்கு குறைந்தபட்சம், 20,000 முதல் அதிகபட்சமாக, 35,000 ரூபாய் வரை மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது.

உணவுப்படி இதுகுறித்து, விடுதி காப்பாளர்கள் சிலர் கூறுகையில், 'பொது சமையலர் திட்டம் என்ற பெயரில், ஒரு மாணவருக்கு, 2,500 ரூபாய் என, உணவுப்படியை உயர்த்தி, அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுஉள்ளனர்.

'இவர்கள் செய்யும் மோசடியை மறைக்கவே, சமையலர்களை பணியில் வைத்துள்ளனர். சமையலர் தேவையுள்ள விடுதிகளுக்கு, இவர்களை மாற்ற வேண்டும்' என்றனர்.

இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சென்னையில் உள்ள, 23 விடுதிகளில், தலா ஒரு சமையலர், உதவியாளர் என, இரண்டு நபர்கள் பணியில் இருந்தனர்.

'தற்போது விடுதிக்கு ஒரு சமையலர் என, மாற்றியுள்ளோம். மீதமுள்ள ஊழியர்களை, சமையலர் இல்லாத விடுதிகளுக்கு மாற்ற உள்ளோம்' என்றார்.






      Dinamalar
      Follow us