sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது

/

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது

6


ADDED : நவ 16, 2025 05:07 PM

Google News

6

ADDED : நவ 16, 2025 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷக்கீல் அகமது தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஓட்டு திருட்டு, இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு என அடுக்கடுக்கான புகார்களை கூறிய ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இந்தத் தோல்வியானது, அடிமட்டத் தொண்டர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கட்சி செயலை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷக்கீல் அகமது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவர் கூறியிருப்பதாவது; பீஹார் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட யுக்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தன. ராகுலின் ஓட்டு அதிகார யாத்திரையில் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் மட்டுமே கலந்து கொண்டனர். உண்மையான வாக்காளர்கள் பங்கேற்கவே இல்லை.

பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அதேபோல, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்க்கும் காங்கிரஸின் அணுகுமுறைக்கு மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லை.

அதேபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளது.கட்சியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ஏற்கனவே எடுத்து விட்டேன். ஆனால், தற்போது தான் அதனை அறிவிக்கிறேன். என்னால் ஒரு 5 ஓட்டுகள் கூட குறைந்து விடக் கூடாது என்பதால் தான் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கவில்லை.

இந்த முடிவை எடுக்கக் காரணம், கட்சியின் கருத்தியலுடன் ஏற்பட்ட முரண்பாடு அல்ல. கட்சியில் உள்ள சில குறிப்பிட்ட நபர்களுடன் உள்ள தனிப்பட்ட வேறுபாடுகளினால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன். நான் வேறு எந்த கட்சியிலோ அல்லது அமைப்பிலோ சேரப்போவதில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. எனது முன்னோர்களைப் போலவே, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us