ADDED : பிப் 25, 2026 04:28 AM

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடக்கவுள்ளது.
'அதில், தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்' என கூறியுள்ளார். பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் அன்புமணி இணைந்துள்ளார். ஆனால், ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வால், எந்தக் கூட்டணியிலும் சேர முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின், கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை, ராமதாஸ் வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

