sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மேட்டூர் அணையில் கதவணைகள் கட்டியிருந்தால் நீர் கடலுக்கு போயிருக்காது

/

மேட்டூர் அணையில் கதவணைகள் கட்டியிருந்தால் நீர் கடலுக்கு போயிருக்காது

மேட்டூர் அணையில் கதவணைகள் கட்டியிருந்தால் நீர் கடலுக்கு போயிருக்காது

மேட்டூர் அணையில் கதவணைகள் கட்டியிருந்தால் நீர் கடலுக்கு போயிருக்காது

17


UPDATED : ஆக 03, 2024 07:27 AM

ADDED : ஆக 03, 2024 01:05 AM

Google News

UPDATED : ஆக 03, 2024 07:27 AM ADDED : ஆக 03, 2024 01:05 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கடந்த மாதம் வறண்டு கிடந்த காவிரி, தற்போது கர்நாடகாவில் ஆர்ப்பரித்து வெள்ளமாக ஓடோடு வருகிறது. பாளம் பாளமாக வெடித்துக் கிடந்த மேட்டூர் அணைப் பகுதி இப்போது ததும்பி வழிவதால், இரண்டு நாட்களில் 27 டி.எம்.சி., உபரி நீர் வெளியேற்றப்பட்டு விட்டது.

சேலம் மேட்டூர் அணை, 93.4 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அணை நிரம்பியுள்ளதால், 1ம் தேதி, வினாடிக்கு 1.67 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும், 27.1 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த நீர், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியாக டெல்டா பாசனத்திற்கு செல்கிறது. வெள்ள சேதத்தை தவிர்ப்பதற்காக, கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் நீரை சேமிக்கும் வகையில், கடலுார் - மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள ஆதனுார் - குமாரமங்கலம் இடையே, கதவணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 496 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு ஆண்டுகளாக பணி நடந்து வருகிறது.

இதில் நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும், 31.3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக, நீர்வளத்துறையினர் கூறி வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடிக்க முடியாததால், கதவணையை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதேபோல, கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, நஞ்சை புகளூர் என்ற இடத்தில், 406 கோடி ரூபாயில் கதவணை கட்டும் பணி நடக்கிறது. இதில், 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சிய பணிகள் இழுபறியில் உள்ளன.

இந்த இரண்டு கதவணை பணிகளை முடித்திருந்தால், அவற்றில் நீரை தேக்கி பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்க முடியும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும். ஆனால், பணிகளை முடிப்பதற்கு நீர்வளத்துறையினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு உள்ள நீரில், அதிகளவு கடலுக்கு சென்று வீணாகி வருகிறது.

Image 1302748

அண்ணாமலை கிண்டல்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கொள்ளிடம் ஆற்றில் தி.மு.க., ஆட்சியில், 6.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை காணவில்லை' என, தெரிவித்துள்ளார். 'கிணற்றை காணவில்லை' என, நடிகர் வடிவேலு, திரைப்படம் ஒன்றில் கூறும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

'

'கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மண்தாங்கு சுவரின் நிலை குறித்து முழுமை யாக அறிய முடியவில்லை' என, நெடுஞ்சாலை துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலையில், 2014 - 15ம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டும் பணி, 24 கண்களுடன் 792 மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2018ல் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் திருப்பி விடப்பட்டதால், பழைய இரும்பு பாலத்தின், 18 மற்றும் 19வது கண்கள் சேதமடைந்து அடித்துச் செல்லப்பட்டன.
புதிய பாலத்தில், பாலத் துாண்கள் 17 முதல் 21 கீழ் உள்ள நிலத்துாண்கள் வரை, 2லிருந்து 4 மீட்டர் ஆழத்திற்கு அடித்தளம் தெரியும் வகையில், மண் அரிப்பு ஏற்பட்டது. இதை தடுப்பதற்கும், பாலத்தின் உறுதி தன்மையை மேம்படுத்துவதற்கும், கொள்ளிடம் ஆற்றுப்படுகையை பாதுகாப்பதற்கும், பாலத்தின் அடியில் மணல் சேருவதற்காக, 6.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 800 மீட்டர் நீளத்திற்கு மண்தாங்கும் சுவர் அமைப்பதற்கு, 2020ல் அனுமதி பெறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 300 மீட்டர் நீளத்திற்கு இரும்புக் கட்டுமானத்துடன் கூடிய கான்க்ரீட் தடுப்பு சுவரும், 492 மீட்டர் நீளத்திற்கு வெறும் கான்க்ரீட் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது. இந்த கான்க்ரீட் அமைப்பே மண் தாங்கு சுவர்.கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள கன மழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு, 1.50 லட்சம் கனஅடி நீர், கடந்த 31ம் தேதி இரவு திறக்கப்பட்டது.
அதிகளவு நீர் திடீரென கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டதால், பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட மண்தாங்கு சுவர்களில், 30 மீட்டர் அளவிற்கும், பாலத்தின் 22 மற்றும் 23வது கண்ணுக்கு இடைப்பட்ட பகுதியில் சற்று மேல்நோக்கியும் நகர்த்தப்பட்டு விட்டது.நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மண்தாங்கு சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய முடியவில்லை. நீர்வரத்து குறைந்த பின்னர் தான், பாதிக்கப்பட்ட மண்தாங்கு சுவரின் விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us