sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அறியப்படாத கோவில்களை ஆவணப்படுத்த திட்டம்

/

அறியப்படாத கோவில்களை ஆவணப்படுத்த திட்டம்

அறியப்படாத கோவில்களை ஆவணப்படுத்த திட்டம்

அறியப்படாத கோவில்களை ஆவணப்படுத்த திட்டம்

1


UPDATED : ஆக 24, 2024 04:30 AM

ADDED : ஆக 24, 2024 02:04 AM

Google News

UPDATED : ஆக 24, 2024 04:30 AM ADDED : ஆக 24, 2024 02:04 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தமிழகத்தில் மக்களால் அறியப்படாத கோவில்களை கண்டறிந்து, அக்கோவில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணி, 2023ல் துவங்கியது.

இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா மேற்பார்வையில், புகைப்படக் கலைஞர் சுகுணா, கார்த்திகேயன், தீபக், ராமசாமி தொல்லியல் ஆய்வு மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இந்த குழுவினர் ஏற்கனவே மதுரை, கோயம்புத்துார், தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கோவில்களை கண்டறிந்து, டிஜிட்டலில் ஆவணப்படுத்தியுள்ளனர்.

தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது:


இந்தியாவில், 43,000 கோவில்கள் உள்ளன. இதில் 9,000 கோவில்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. இதில், மக்களால் அதிகம் அறியப்படாத, மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை பராமரிப்பில் இல்லாத பல கோவில்கள் உள்ளன.

அவற்றை ஆய்வு செய்து கோவில்களின் தற்போதைய நிலை, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், கோவிலின் சிறப்பு அம்சங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த உள்ளோம்.

இதுவரை, 300 கோவில்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. டெல்டா பகுதியில் இதுவரை 30 கோவில்களை கண்டறிப்பட்டு புகைப்படம், வரைபடங்களை ஆவணப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us