sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் புதிய திட்டம்?

/

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் புதிய திட்டம்?

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் புதிய திட்டம்?

டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் புதிய திட்டம்?

3


UPDATED : ஆக 18, 2024 01:31 AM

ADDED : ஆக 18, 2024 01:15 AM

Google News

UPDATED : ஆக 18, 2024 01:31 AM ADDED : ஆக 18, 2024 01:15 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் கலவரம் நடந்தது. அதில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியினர் கொல்லப்பட்டதுடன், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு, பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு, பா.ஜ., கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பேசிய பிரதமர் மோடி, தன் உரையில், 'வங்க தேசத்தில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்தியாவின் 140 கோடி மக்களும் இதைத்தான் விரும்புகின்றனர்' என்றார்.

இஸ்ரேல் தாக்குதலால், காசாவில் பலியானவர்களுக்கு இந்தியாவில் எதிர்க்கட்சிகளும், பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், வங்கதேசத்தில் நடைபெறும் தாக்குதல் குறித்து அதிகம் பேசவில்லை. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்டனம் என ஏதோ பேச்சிற்கு பேசினாலும், ராகுல் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பா.ஜ., முடிவெடுத்து உள்ளதாம். அனைத்து மாநில தலைநகரங்களிலும், ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டன கூட்டம் நடத்தப் போகிறதாம்.

பா.ஜ.,வின் முதுபெரும் தலைவர் அத்வானி ரத யாத்திரை நடத்தியது போல, இந்த பொதுக்கூட்டங்கள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் என, பா.ஜ., நம்புகிறதாம்.






      Dinamalar
      Follow us