sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கன்டெய்னர்கள் தட்டுப்பாடு கலங்கும் ஏற்றுமதியாளர்கள்

/

கன்டெய்னர்கள் தட்டுப்பாடு கலங்கும் ஏற்றுமதியாளர்கள்

கன்டெய்னர்கள் தட்டுப்பாடு கலங்கும் ஏற்றுமதியாளர்கள்

கன்டெய்னர்கள் தட்டுப்பாடு கலங்கும் ஏற்றுமதியாளர்கள்

1


UPDATED : ஜூலை 08, 2024 03:23 AM

ADDED : ஜூலை 07, 2024 11:47 PM

Google News

UPDATED : ஜூலை 08, 2024 03:23 AM ADDED : ஜூலை 07, 2024 11:47 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம், ஏற்றுமதிக்கான பின்னலாடைகள், துறை முகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை, கொச்சி, துாத்துக்குடி துறைமுகங்களில், பெரிய சரக்கு கப்பல் வந்து செல்ல வசதி உண்டு. இருப்பினும், சீனாவில் இருந்து புறப்படும் கப்பல், கொழும்பு வந்து, அங்கிருந்து துாத்துக்குடி வந்துசெல்ல, கூடுதலாக, இரண்டு நாட்களாகிறது. துாத்துக்குடி செல்லும் ஏற்றுமதி கன்டெய்னர்கள், அங்கிருந்து சிறிய கப்பல்களில், கொழும்பு துறைமுகம் கொண்டு சென்று, அங்கு பெரிய கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது.

நிரந்தரத் தீர்வு தேவை


திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ரத்தினசாமி:

கடந்த ஒரு மாதமாக, சரக்கு அனுப்ப, கன்டெய்னர் கிடைப்பதே இல்லை; கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. துாத்துக்குடியில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, வாடகை கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி சரக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், ஏற்றுமதிக்கான கன்டெய்னர் கிடைப்பதில்லை. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை.

கட்டண உயர்வு


திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம்:

சிறிய கன்டெய்னர் வாடகை, மே மாதம், 2.72 லட்சம் ரூபாயாக இருந்தது; கடந்த வாரம் 5.59 லட்சமாக உயர்ந்துள்ளது. பெரிய கன்டெய்னர் வாடகை, 3.53 லட்சம் ரூபாயாக இருந்தது; 7.26 லட்சமாக உயர்ந்துள்ளது.விமான சரக்கு போக்குவரத்து கட்டணமும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து அமெரிக்கா அனுப்ப, கிலோவுக்கு, 561 ரூபாய்; பிரிட்டனுக்கு அனுப்ப, 332 ரூபாய் செலவாகிறது. விமானத்தில் சரக்கு அனுப்ப, 20 முதல், 25 சதவீதம் அளவுக்கு செலவு அதிகரிக்கும். பல்வேறு நெருக்கடியை கடந்து வந்து, எதிர்நீச்சல் போட்ட ஏற்றுமதியாளர்களுக்கு தற்போது புதிய சவால் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us