sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முட்டுக்காடு மிதவை உணவகம்

/

முட்டுக்காடு மிதவை உணவகம்

முட்டுக்காடு மிதவை உணவகம்

முட்டுக்காடு மிதவை உணவகம்


UPDATED : ஜூலை 07, 2024 03:25 AM

ADDED : ஜூலை 07, 2024 12:36 AM

Google News

UPDATED : ஜூலை 07, 2024 03:25 AM ADDED : ஜூலை 07, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சென்னை அடுத்த, முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், படகு குழாம் நடத்தப்படுகிறது. பகிங்ஹாம் கால்வாய் - வங்க கடல் முகத்துவார நீர்பரப்பில் படகு சவாரி நடக்கிறது.

தற்போது பயணியர் அதிகரிக்கும் சூழலில், அவர்களை கவரும் வகையில், தனியார் நிறுவன பங்களிப்புடன் இங்கு, மிதவை உணவகம் அமைக்க, நிர்வாகம் முடிவெடுத்தது.

இத்திட்டத்தை ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த 'கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

இந்த இப்படகு மிதவை உணவகம், 125 அடி நீளம், 25 அடி அகலம் அளவில், இரண்டு தளங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

கீழ்தளத்தில் பிரதான உணவகம், குளிர்சாதன வசதியுடன் 100 பேர், அமர்ந்து உணவருந்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேல்தள திறந்தவெளி பகுதியில், 50 பேர் நின்றவாறு, இயற்கை அழகை ரசித்து உணவருந்தலாம். இந்த மிதவை உணவக பணி முடிந்து திறப்புக்கு தயாரான நிலையில், சில காரணங்களால் தாமதமாகிறது.

மது பரிமாற தடை

மிதவை உணவகம் திறப்பு தாமதம் குறித்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் கூறியதாவது:மிதவை உணவகத்தில், உணவு வகைகள் விற்க மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், முதலீடு செய்துள்ள தனியார் நிறுவனம் லாபம் கருதி, மதுபானம் விற்க அனுமதி கோருகிறது. மது விற்க அனுமதிக்க இயலாது என, உறுதியாக மறுத்துவிட்டோம்.இதுமட்டுமே தாமதத்திற்கு காரணமல்ல. படகு குழாம் கால்வாயில் சேறு, சகதி அதிகம். நீளமான படகு இயங்க, அதற்கேற்ப கால்வாயில் ஆழம், நீர் இருப்பும் அவசியம். சேற்றை அகற்றவும் பரிசீலிப்பதால் தாமதமாகிறது. பயணியர் பயன்பாட்டிற்கு விரைவில் துவக்கிவிடுவோம்இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.



- நமது நிருபர் --






      Dinamalar
      Follow us