sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முத்துக்குடா பகுதியில் அலையாத்தி காடு: சுற்றுலா தலம் அமைக்கும் பணி தீவிரம்

/

முத்துக்குடா பகுதியில் அலையாத்தி காடு: சுற்றுலா தலம் அமைக்கும் பணி தீவிரம்

முத்துக்குடா பகுதியில் அலையாத்தி காடு: சுற்றுலா தலம் அமைக்கும் பணி தீவிரம்

முத்துக்குடா பகுதியில் அலையாத்தி காடு: சுற்றுலா தலம் அமைக்கும் பணி தீவிரம்


ADDED : மே 25, 2024 02:05 AM

Google News

ADDED : மே 25, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி 42 கி.மீ., உள்ளது. கடற்கரையோரத்தில் சில இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. அந்த பகுதிகளில் ஒன்றான, முத்துக்குடா பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இப்பகுதியில் தெற்கு வெள்ளாறு கடலோடு கலக்கிறது. அலையாத்தி காடு உருவாக்குவதற்காக கடற்கரை பகுதியில் 1,600 மீட்டர் தொலைவிலும், 91 கிளைகள் பிரிந்து செல்லும் வகையிலும் வடிவமைத்து வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன.

மீன் முள்வடிவ தோற்றத்தில் இந்த அலையாத்தி காடு உருவாக்கப்படுகிறது. இதில், 44 ஆயிரம் அலையாத்தி செடி விதைகள் விதைக்கப்பட்டன.

கடந்த ஆண்டில் விதைக்கப்பட்டவை தற்போது நன்கு வளரத் தொடங்கியுள்ளன. அலையாத்தி செடிகள் வளர்ந்து வரும் நிலையில் மரமாகி விரைவில் காட்டின் தோற்றம் அடைந்து விடும்.

அலையாத்தி காடு அடர்த்தியாகக் காணப்படுவதை போல, இந்த பகுதியிலும் அலையாத்தி காடு உருவாகும்.

இதன் வாயிலாக மீன் உட்பட கடல்வாழ் உயிரினத்தை பெருக்க பயனாக அமையும். கடல்நீர் பெருக்கெடுத்து கரைக்கு வர வாய்ப்புகள் குறையும்.

பறவையினங்கள் அதிகம் வந்து தங்குவதற்கு வசதியாக அமையும். வெளிநாட்டு பறவைகளும் வர வாய்ப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us