ADDED : ஆக 20, 2024 01:24 AM

திருமலை திருப்பதியில் ஆண்டு முழுதும், 450 விழாக்கள் நடக்கின்றன. அவற்றுள் சிகரம் வைத்தது போல நடப்பது பிரம்மோற்சவ விழாவாகும்.
இறைவனே நடத்துவதாக கருதப்படும் இந்த விழாவை காண, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவர்.
அதிலும் கருட வாகனத்தன்று, திருமலையே கொள்ளாத அளவிற்கு பல லட்சம் பக்தர்கள் திரள்வர். இந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
காலை, இரவு வேளைகளில், சன்னிதி தெருவில், வாகனத்தில் சுவாமி வலம் வரும் போது, பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா நாட்களில் மூலவர் தரிசனம் என்பது, ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கே சிரமமாக இருக்கும்; தர்மதரிசனத்திற்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மேலும், 8ம் தேதி நடைபெறும் மோகினி அவதாரத்தின் போது, மோகினி அவதாரத்தில் வரும் மலையப்ப சுவாமியானவர், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வருவார் என்பது விசேஷம். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மாலை சென்றடையும்.
-நமது நிருபர்-

