sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஒரே அக்கவுன்டில் 2 பேருக்கு யு.பி.ஐ.,

/

ஒரே அக்கவுன்டில் 2 பேருக்கு யு.பி.ஐ.,

ஒரே அக்கவுன்டில் 2 பேருக்கு யு.பி.ஐ.,

ஒரே அக்கவுன்டில் 2 பேருக்கு யு.பி.ஐ.,

3


ADDED : ஆக 09, 2024 01:27 AM

Google News

ADDED : ஆக 09, 2024 01:27 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ரிசர்வ் பேங்க் கூட்டத்தின் முடிவில் நேற்று, ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாக தொடரும் என, ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

வங்கிகளில் காசோலை டிபாசிட் செய்யப்பட்டதில் இருந்து, பரிவர்த்தனைகளை முடிக்க வங்கிகள் இரண்டு நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன. நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ்., போன்று, காசோலையை டிபாசிட் செய்த சில மணி நேரங்களுக்குள், காசோலை பரிவர்த்தனைகளை முடிக்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும்.

யு.பி.ஐ., வாயிலாக வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு, 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்துவோர் வேலை சுலபமாகும்.

யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் மற்றொரு பெரிய மாற்றமும் அறிமுகமாகிறது. ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து, தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம்.

குறிப்பிட்ட தொகை வரை அவர் பரிவர்த்தனை செய்யலாம். அவருக்கு யு.பி.ஐ., உடன் இணைக்கப்பட்ட தனி வங்கி கணக்கு தேவையில்லை. இதன் முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கடன் வழங்கும் நிறுவனங்கள், சி.ஐ.சி., எனப்படும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு தரவுகளை அளிப்பதற்கான அவகாசம், ஒரு மாதத்தில் இருந்து இரு வாரங்களாக குறைக்கப்படுகிறது.

தங்களது கடன் விபரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக புதுப்பிக்கப்படுவதால், கடன் வாங்குவோர் பயனடைவர். கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனாளிகள் குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்க உதவும்.

இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us