sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மஹா கும்பமேளாவில் 15 நாட்களில் 14.12 கோடி பேர் புனித நீராடல்: உ.பி., அரசு தகவல்

/

மஹா கும்பமேளாவில் 15 நாட்களில் 14.12 கோடி பேர் புனித நீராடல்: உ.பி., அரசு தகவல்

மஹா கும்பமேளாவில் 15 நாட்களில் 14.12 கோடி பேர் புனித நீராடல்: உ.பி., அரசு தகவல்

மஹா கும்பமேளாவில் 15 நாட்களில் 14.12 கோடி பேர் புனித நீராடல்: உ.பி., அரசு தகவல்


ADDED : ஜன 28, 2025 04:19 AM

Google News

ADDED : ஜன 28, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தர பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில், தினமும் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள், புனித நீராட வருகை தருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கின்றன. இந்த இடத்தில், ஆண்டுதோறும் 'மகாமேளா' புனித நீராடுதல் நடக்கிறது. உத்தர பிரதேச மாநில மக்கள், இங்கு வந்து புனித நீராடிவிட்டு செல்வர்.

பொது விடுமுறை


இந்த ஆண்டு நிகழ்வானது, 12 பூரண கும்ப மேளாவுக்கு பிறகு, அதாவது, 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மஹா கும்பமேளா ஆகும். திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்., 26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்ப மேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. நாடு முழுதும் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

கும்பமேளா துவங்கியதில் இருந்து நேற்று மாலை வரை, 14.12 கோடி பேர், புனித நீராடி உள்ளனர். நேற்று மட்டும், ஒரே நாளில், 91.15 லட்சம் பேர் புனித நீராடினர். உத்தர பிரதேச அரசு தினமும், எதிர்பார்த்ததை விட, 15 முதல், 20 சதவீதம் மக்கள் கூடுதலாக வருகின்றனர். இதனால், மஹாகும்பமேளா நடக்கும் பிரயாக் ராஜில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளே காணப்படுகின்றன.

புனித நீராட 45 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல், 15 நாட்களில், 31.35 சதவீதம், அதாவது 14.12 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். நாளை மவுனி அமாவாசை என்பதால், அன்று மட்டும், ஒரே நாளில், 10 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புனித நீராடும் மக்களின் உயிர், உடைமைகள் போன்றவற்றுக்கு, உத்தர பிரதேச அரசும், மத்திய அரசும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. மொத்தம், 60,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இது குறித்து, பிரயாக்ராஜ் கூடுதல் போலீல் கமிஷனர் கொளஞ்சி கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மஹா கும்பமேளாவில் புனித நீராட, மக்கள் வந்தபடி உள்ளனர். பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., படை தவிர மற்ற அனைத்து பிரிவினரும், இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Image 1374284


கண்காணிப்பு கேமரா


மக்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, பிரயாக்ராஜ் எல்லையில் துவங்கி புனித நீராடும் இடங்கள் வரை, 24 மணி நேரமும், பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன. சிறு பிரச்னை ஏற்பட்டாலும், அடுத்த நிமிடமே, அந்த இடத்துக்கு பாதுகாப்பு படையினர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us